Kirjahaku
Etsi kirjoja tekijän nimen, kirjan nimen tai ISBN:n perusteella.
32 kirjaa tekijältä Pa Raghavan
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம். எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது? விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல். கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கதை.
யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை. கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்.
வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் 'ஓப்பன் டிக்கெட்' பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது. விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது பெரிதல்ல. பல பிரச்னைகள் இன்றுவரை உயிருடன் இருப்பதை - பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் மெய்யாகியிருப்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள்.
ஹிட்லர் என்கிற ஒரு மனிதனின் மண்ணாசைதான் தொடக்கப் புள்ளி. மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் வரைபடங்களில் மாற்றி வைத்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது முதல் ஹிட்லரின் மறைவுடன் அது முடிவுக்கு வந்தது வரையிலான சம்பவங்களைப் பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்நூல்.
ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர். தேசத்தை - ஆட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல வழி நடத்தப் பார்த்தவர். இறுதியில் அவரே வளர்த்து ஆளாக்கிவிட்ட தீவிரவாத இயக்கங்களால் சூனியம் வைக்கப்பட்டு, வேறு வழியின்றி, ஆண்ட காலம் வரை அமெரிக்க அடிமையாக இருந்துவிட்டுப் போனார். ஆட்சிக்காலத்துக்குப் பிறகு தேசத்துரோக வழக்கு வரை போட்டுத் தாளித்துவிட்டார்கள். உயிர் தப்பி லண்டனுக்குச் சென்று பிறகு துபாயில் அடைக்கலமாகி, இறுதி மூச்சை அங்கே விட்டார். சர்வாதிகாரிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்தெந்தக் காரணிகள் அவர்களை உச்சத்துக்கு எடுத்துச் செல்கின்றன? எதில் தடுக்கி விழுகிறார்கள்? ஏன் மீள முடியாமலே போகிறது என்பதை முஷாரஃபின் வாழ்வைக் கொண்டு தெளிவாக அறிய முடியும்.
பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் படிப்பினைகளையும் தருவதே இந்நூல் ஏழாண்டுகள் கழிந்த பின்பும் மறு பதிப்பு காண்பதன் ஒரே அர்த்தம். சர்வதேச அரசியல் விவகாரங்களை மட்டுமே எப்போதும் எழுதி வரும் பா. ராகவன் முதல் முறையாக இதில் தமிழ்நாட்டு அரசியலைத் தொட்டுத் துலக்கியபோது எழுந்த பரபரப்பும் ஆரவாரமும் இன்றும் நினைவுகூரப்படுபவை.